யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த கொழும்பை சேர்ந்த சிறுவன்! தாய் - சித்தப்பா துன்புறுத்துவதாக முறைப்பாடு...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த கொழும்பை சேர்ந்த சிறுவன்! தாய் - சித்தப்பா துன்புறுத்துவதாக முறைப்பாடு...

தனது தாயும் சித்தப்பாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான். 

கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்ததாகவும், 

யாழ்ப்பாணத்தில் வேறு நபர்களை தெரியாத காரணத்தால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு