அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது வைத்தியர் நீரில் முழ்கி உயிரிழப்பு

ஆசிரியர் - Editor III
அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது வைத்தியர் நீரில் முழ்கி உயிரிழப்பு

நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர்  மரணமடைந்த துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் பாணம பகுதியில்  நிகழ்ந்துள்ளது.

சனிக்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கநாதன் தக்சிதன் என்ற வைத்தியரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைதீவு பகுதியை  சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதனின்  மூத்த புதல்வரான இவர் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வருகின்றார்.

 நேற்று உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன்  சென்று வரும் வழியில் பாணமை  கடலில் தவறுதலாக வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருப்பதாக ஆரமடப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது மரணமடைந்த வைத்தியரின் சடலம் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் காரைதீவைச் சேர்ந்த மருத்துவ துறைக்கு தெரிவாகிய மாணவனும்  நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றிரந்தமையும் குறிப்பிடத்தக்கது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு