காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் ஒத்துழைப்பதற்குத் தயார் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் ஒத்துழைப்பதற்குத் தயார் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்..

இலங்கைக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கடந்த 16ஆம் திகதி நாட்டை வந்தடைந்திருந்தார்.அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும்  பங்கேற்றிருந்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

அத்தோடு, இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் இது சாத்தியம் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு