காதலி வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
காதலி வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை , பனிரெண்டாவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.காணாமல் போன இளைஞன் கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதுடன், 

இவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த இளைஞரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகிய பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

வெலிமடை மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் இந்தக் கொலைக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுகேன பிரதேசத்தில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த இளைஞனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு