கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 78 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத சந்தேக நபர்கள் சிலர் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த பெண் அவருடைய சகோதரி மற்றும் கணவருடன் வசித்து வருவதுடன் இருவரும் வெளியில் சென்ற போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு