தனிமையில் வாழ்ந்த பெண் சட்டத்தரணி மர்ம மரணம், வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழ்ந்த பெண் சட்டத்தரணி மர்ம மரணம், வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளை!

வீட்டில் தனிமையிலிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த சேபாலிக்கா சாந்தனி என்ற 64 வயதான சட்டத்தரணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் அவரது சகோதரர் கனடாவில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கனடாவில் உள்ள தனது சகோதரனுடன் தினமும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வரும் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 

சகோதரியிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என உயிரிழந்தவரது சகோதரனின் நண்பரொருவர் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் வசில பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு