70 லட்சம் ரூபாய் பெறுமதியான பீடி இலைகளுடன் 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
70 லட்சம் ரூபாய் பெறுமதியான பீடி இலைகளுடன் 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்களிடமிருந்து, 42 பொதிகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள், 

இவற்றைக் கடல் மார்க்கமாக ஏற்றிச் சென்ற படகு, தரைவழி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 03 வயதுடைய சிறுவன் , கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன், ஜனசவிபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர். 

காலம் காலமாக இந்தியாவிலிருந்து கல்பிட்டி கடல் வழியாகப் பீடி இலைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதன் காரணமாக ஆண்டுக்கு கோடிக்கணக்கான சுங்க வரிகளை நாடு இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு