மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி கோர விபத்து! 16 வயது சிறுவன் பலி...

ஆசிரியர் - Editor I
மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி கோர விபத்து! 16 வயது சிறுவன் பலி...

ரம்பே - மல்சிரிபுர வீதியில் பன்சியகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலடன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனாவார்.இவர் மூவருடன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துள்ள நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளானது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவனும் மற்றுமொரு நபரும் காயமடைந்த நிலையில் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பொல்பிதிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு