திருமணமான ஆணுடன் தகாத உறவு, சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுமி! புத்தாண்டு தினத்தில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திருமணமான ஆணுடன் தகாத உறவு, சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுமி! புத்தாண்டு தினத்தில் நடந்த சம்பவம்..

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில்ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயதான யுவதி உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை 40 வயதுடைய நபரே மேற்கொண்டுள்ளதாகவும் அவருக்கும் சிறுமிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 8.45 மணியளவில் பொலன்னறுவை, கிரித்தல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யுவதி, திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் 

அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு