ஒட்டகச்சிவிங்கியின் கொங்கிறீட் சிலை உடைந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
ஒட்டகச்சிவிங்கியின் கொங்கிறீட் சிலை உடைந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு..

கொங்கிறீடினால் உருவாக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி வடிவிலான சிலை ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஹெட்டிபொல ,திக்கலகெதர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவன் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது 

அங்கிருந்த இந்த கொங்கிறீட் சிலை உடைந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து காயமடைந்த சிறுவன் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு