நீர்த்தாங்கி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
நீர்த்தாங்கி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழப்பு..

நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பொலன்னறுவை - அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹிருணி ரஷ்மிகா தேவி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது மூத்த சகோதரியுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தான் நீராட வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

பின்னர், இந்த சிறுமி நீராடுவதற்காக குளியலறைக்கு சென்றுள்ள நிலையில் குளியலறையின் மேற்கூரையில் இருந்த நீர்த் தாங்கி தலையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு