புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரம், மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி..

ஆசிரியர் - Editor I
புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரம், மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி..

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது.

மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,

தாக்குதலை மேற்கொண்ட மருமகனை கைதுசெய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு