75 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஆசிரியர் - Editor I
75 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சுமார் 75 கொக்கெய்ன் போதைமாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலைத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.மடகஸ்கரைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடியே 50 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மும்பையில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விழுங்கிய கொக்கெய்ன் மாத்திரைகளை வெளியேற்றினர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் கொக்கெய்ன் போதை மாத்திரைகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு