இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 18 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 18 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்...

முல்லைத்தீவு - மாமூலை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முள்ளியவளை - பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த தி.கேதீஸ்வரன் (வயது18) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 வயதான மற்றைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு