பூநகரியில் 10 கிலோ (சீ -4) வெடிமருந்துடன் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
பூநகரியில் 10 கிலோ (சீ -4) வெடிமருந்துடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் 10 கிலோ சி - 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை , மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,

பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு , மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்தனர். குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை மீட்டனர். அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு