இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்ல உள்ள ஒரே வழி!

ஆசிரியர் - Admin
இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்ல உள்ள ஒரே வழி!

ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாங்கள் பல்வேறு பட்ட தடைகளை தாண்டி வந்திருக்கின்றோம். எங்களுடைய ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் என்ன காரணத்திற்காக ஆயுதப் போராட்டம் தொடங்கியதோ அந்த நிலமை மோசமாக இன்றும் இருக்கிறது.

இலங்கையில் இதுவரை வந்த ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பவர்களாக இதுவரை இல்லை.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இது வரை தீர்வு எட்டப்பட்டது என்றால் அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் எமது அரசியல் சாசனத்தில் உள்ள விடயமாக உள்ளது.

13 ஆவது திருத்தத்தில் உள்ள மாகாணசபையைக் கூட தருவதற்கு தயாரில்லை. கடந்த 6, 7 வருடங்காளாக அதற்கு தேர்தலும் நடத்தப்படாத நிலை உள்ளது.

மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதேநேரம், இந்தவருடம் தேர்தலைப் எதிர்நோக்கும் ஒரு வருடமாகவும் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சில கருத்துக்கள் உருவாகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருகின்றதா? இன்று பலமான பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர் கொள்ளத் தயாரா? 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதை ஏற்பார்களா? என்றால் அதற்கான சூழ்நிலைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே, இவ்வாறான நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது.தமிழ் மக்கள் அதனை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதும் இங்கு இருக்கக் கூடிய கேள்வியாகவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகள் கடந்த சில மாதங்களாக இவை தொடர்பான பல்வேறுபட்ட கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன” என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு