உண்மையை வெளிப்படுத்துங்கள்! - மைத்திரியிடம் சஜித் வேண்டுகோள்.

ஆசிரியர் - Admin
உண்மையை வெளிப்படுத்துங்கள்! - மைத்திரியிடம் சஜித் வேண்டுகோள்.

முன்னாள் ஜனாதிபதி அவர்களே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கருத்தொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை தெரியும் என தெரிவித்துள்ளார்.

இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறியதான் நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம்.

இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் எந்த பதவி நிலைகளில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கூடிய தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு