மனோ கணேசனுடன் வடக்கு கிழக்கின் மக்கள் மனு குழு சந்திப்பு!

ஆசிரியர் - Admin
மனோ கணேசனுடன் வடக்கு கிழக்கின் மக்கள் மனு குழு சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இல்லத்தில், நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ. ஜதீந்திரா, எஸ்.எஸ். குகநாதன், எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.     

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள் அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி தலைவர்களுடன், தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாணசபைகள் என்ற அடிப்படையில் பொது பட்ச உடன்பாட்டை காண்பது தொடர்பில் குறைந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

வ/கி மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்த பட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை பெற வேண்டும் என கலந்து உரையாடினோம். எதிர்வரும் தேர்தல், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலா, அவ்வாராயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் போன்ற விடயங்கள் பற்றியும் கலந்து உரையாடினோம்.

'வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம்' என்ற நிலைப்பாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கோர சிங்களப் பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டைப் பற்றியும் உரையாடினோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியால், மலையக தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் தமுமுக கலந்து உரையாட திட்டமிட்டுள்ளது. எமது ஆவண நிலைப்பாடுகள், அவ்வந்தக் கட்சிகளின் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் பெறுவதைப் பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான், வ/கி மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்துரைத்தேன்.

ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்த பட்ச அபிலாஷைகளை நடைமுறை சாத்தியமான முறையில் விட்டுக்கொடுக்காமல் வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் நான் உறுதி அளித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு