நண்பரின் கத்திக்குத்துக்கு இலக்கான 33 வயதான இளம் குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
நண்பரின் கத்திக்குத்துக்கு இலக்கான 33 வயதான இளம் குடும்பஸ்த்தர் பலி!

கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் தாக்கிய சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் இவரது நண்பனால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதன்போது, கம்பஹா, பொக்குண பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு