தவறான உறவால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது! முல்லைத்தீவு - விசுவமடுவில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
தவறான உறவால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது! முல்லைத்தீவு - விசுவமடுவில் சம்பவம்...

முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கணவரைப் பிரிந்து வாழும் இந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பெற்றெடுத்து அதனைக் கொன்றதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு