யாழ்.நகரில் வாளுடன் பயணித்த வன்முறை கும்பலை மடக்கிய அதிரடிப்படை! 5 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வாளுடன் பயணித்த வன்முறை கும்பலை மடக்கிய அதிரடிப்படை! 5 பேர் கைது..

யாழ்.நகரில் வாள்களுடன் பயணித்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 

இன்று அதிகாலை ஆட்டோ ஒன்றில் பயணித்த நிலையில் வன்முறை கும்பலை மடக்கிப் பிடித்த விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவத்தில் யாழ்.நகரம், கொக்குவில், குருநகர், வண்ணார்பண்ணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

கைதான சந்தேகநபர்களிடமிருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன. சந்தேகநபர்கள் பயணித்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு