வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது! பொலிஸார் மீண்டும் அடாவடி..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது! பொலிஸார் மீண்டும் அடாவடி..

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை (8) மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயநிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர். 

இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிசாரால் தடங்கல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்தின் நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

அதனை செவ்வாய்க்கிழமை (5) விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலயநிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது. 

இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வியாழக்கிழமை (7) மாலை உழவியந்திரத்தில் சென்றுகொண்டிருந்த பூசாரி உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் செவ்வாய்க்கிழமை (5) வழிமறிக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை (5) நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. 

இந் நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிசார் குறித்த இருவரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு