யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்டதுார தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது. இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். 

இந்நிலையில் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். 

பொலிஸார் தலையிட்டு சில இ.போ.ச பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவிக்கும்போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 




காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு