ஐ போண் ஒன்றை திருடி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்த யாசகர் கைது!

ஆசிரியர் - Editor I
ஐ போண் ஒன்றை திருடி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்த யாசகர் கைது!

பல லட்சம் ரூபாய் பெறுமதியான ஐ போன் ஒன்றை திருடி 1000 ரூபாய்க்கு விற்பனை செய்த யாசகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் 

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார்.திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர் பிடிபட்டுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட ஐ போன் உரிமையாளரின் கைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு