மரத்தின் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
மரத்தின் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகளுக்கான சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் கீழ் சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர்  கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர்   பம்பலப்பிட்டி பொலிஸில்  இது தொடர்பில் முறைப்பாடு செய்ததுடன் சுமார் ஆறு பேர் கொண்ட குழுவொன்று வந்து தன்னை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய  குழுவில்  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருந்ததார் எனக்  கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு