கட்டுப்பாடற்ற வேகம்! கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான கார்...

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்! கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான கார்...

முல்லைத்தீவு பரந்தன் A.35 பிரதான விதி ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் நேற்று மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டதுபோது வேககட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி தள்ளி கடையினுல் புகுந்துள்ளது.

இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை காரின் கீழ்ப்பகுதியிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு