அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Editor I
அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக,

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்  நேற்று வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு