கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதான இளைஞன் திடீர் மரணம்!

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதான இளைஞன் திடீர் மரணம்!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (30) இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் அநுராதபுரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு