புதிய நிர்வாக தொிவுக்காக மீண்டும் திருகோணமலையில் கூடிய தமிழரசுக் கட்சி!

ஆசிரியர் - Editor I
புதிய நிர்வாக தொிவுக்காக மீண்டும் திருகோணமலையில் கூடிய தமிழரசுக் கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசியமாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்தவகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் ஜனவரி (27)இன்று திருகோணமலையில் இடம்பெறவுள்ளன. அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்பதாக 

தற்போது திருகோணமலை- முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடிவருகின்றனர்.

அதன்பின்னர் பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேவேளை ஜனவரி (27)இன்று பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெற்று முடிந்தவுடன், (28)நாளையதினம் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசியமாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு