வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

ஆசிரியர் - Editor III
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

காரைதீவு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளி குடும்பங்களுக்கு புளொட் அமைப்பால் நிவாரண பொதிகள்  புதன்கிழமை(17) வழங்கி வைக்கப்பட்டன.

புளொட் அமைப்பின்  அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரனின் ( சங்கரி ) தலைமையில் காரைதீவை சேர்ந்த புளொட் செயற்பாட்டாளர்கள் நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்கள். 

அமைப்பின் ஜேர்மன் கிளையை சேர்ந்த தோழர்கள் இவ்வேலை திட்டத்துக்கான நிதி பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர். பயனாளிகள் தெரிவு நீதியும், நேர்மையுமான முறையில் இடம்பெற்று உள்ளது, எமது மக்களின் துன்பத்தில் பங்கெடுப்பவர்களாக நாம் எப்பொழுது உள்ளோம் என்று ஊடகங்களுக்கு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு