யாழ்.கோண்டாவிலை சேர்ந்த 14 வயது சிறுமி உட்பட 10 பேரை காணவில்லை! 2 நாட்களில் மட்டும்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலை சேர்ந்த 14 வயது சிறுமி உட்பட 10 பேரை காணவில்லை! 2 நாட்களில் மட்டும்...

கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் சிறுவர் முதல் பெரியோர் வரையான 10 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெலிபன்னை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி 2 வயது குழந்தை மற்றும் அவரது தாய் காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன பெண் ஒரு யூடியூப் சேனலை நடத்திச் செல்பவர் என வெலிபன்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி வறக்காப்பொலவில் 26 வயது யுவதியும் மொரட்டுவையில் 57 வயது பெண்ணும் முல்லேரியாவில் 67 வயது நபரொருவரும் தம்பகல்லவில் நபரொருவரும் அம்பாறை பிரதேசத்தில் 53 வயது நபரொருவரும் வவுணதீவு பிரதேசத்தில் 42 வயது நபரொருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நுவரொலியா ,மெதகம பிரதேசத்தில் 40 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு