சொந்த வீட்டுக்குத் திரும்புகிறார் ரணில்! - அயலவர்களின் விபரங்களை திரட்டுகிறது பொலிஸ்.

ஆசிரியர் - Editor IV
சொந்த வீட்டுக்குத் திரும்புகிறார் ரணில்! - அயலவர்களின் விபரங்களை திரட்டுகிறது பொலிஸ்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     

தற்போது அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் தகவல்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2022ல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது அதனையடுத்து தற்போது திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தனது தனிப்பட்ட இல்லத்துக்கு திரும்பவுள்ள நிலையில், தகவல் சேகரிப்பு இடம்பெறும் என நம்புவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு