இலங்கையை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ’ஆன், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்கிறார்...

ஆசிரியர் - Editor I
இலங்கையை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ’ஆன், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்கிறார்...

பிரித்தானிய இளவரசி ஆன் (Princess Anne), இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை (10) நாட்டை வந்தடைந்தார்.

இளவரசி இம்மாதம் 13ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – பிரித்தானிய உறவின் 75ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.

மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளதுடன் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு