மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம், அதே மயனத்தில் நிர்வாண நிலையில் கிடந்த கோரம்...

ஆசிரியர் - Editor I
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம், அதே மயனத்தில் நிர்வாண நிலையில் கிடந்த கோரம்...

பண்டாரவளை பிரதேசத்தில் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதியின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் காணப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ராஷ்மிகா நதிஷானி என்ற 25 வயது பெண்ணாவார்.

இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) உயிரிழந்த பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்துக்கு சென்ற தந்தை தனது மகளின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் வெளியேற்றப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து இவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு