வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முயன்றவரை தீண்டிய பாம்பு! திருடர் கூட்டமே தப்பி ஓட்டம்!

ஆசிரியர் - Editor I
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முயன்றவரை தீண்டிய பாம்பு! திருடர் கூட்டமே தப்பி ஓட்டம்!

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது

குறித்த திருடன் அங்கு பொருத்தப்பட்ட CCTV கமராவின் பிரதான இணைப்பு  பெட்டியின் மூடியை திறந்து இணைப்பை நிறுத்த முற்பட்ட போது அங்கு இருந்த பாம்பு தீண்டியுள்ளது. 

இதனையடுத்து திருட்டை கைவிட்டுவிட்டு பாம்பு தீண்டிய குறித்த நபரை அவருடன் வந்த ஏனைய திருட்டு குழுவினர்  தூக்கிகொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு