பெருமளவு நகை, பணம், போதைப் பொருட்களுன் கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
பெருமளவு நகை, பணம், போதைப் பொருட்களுன் கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நகைகள், பணம் மற்றும் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 29.11.2023 அன்று 860 000 பெறுமதியான தங்கநகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த களவு தொடர்பான விசாரணைகளுக்கமைவாக கிளிநொச்சி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 

கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கருணரத்தினம் ஜசிந்தன் தலைமையிலான குழு தேடுதல் மேற்கொண்ட நிலையில், 

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், IPhone தொலைபேசி ஒன்று, 198 000 பணம் மற்றும் ஹெரோயின் 430mg , Mahendra வாகனம் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்வத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்களும், சான்று பொருட்களும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு