இறுதி யுத்தத்தில் காணாமல்போன மோட்டார் சைக்கிள், 14 வருடங்களின் பின் உரிமையாளர் மீது வழக்கு...

ஆசிரியர் - Editor I
இறுதி யுத்தத்தில் காணாமல்போன மோட்டார் சைக்கிள், 14 வருடங்களின் பின் உரிமையாளர் மீது வழக்கு...

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது காணாமல் போயிருந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று (06.12.2023) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை விடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல் போயிருந்தது.

மோட்டார் சைக்கிளை உரிமையாளர் நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை நாளை 8 ஆம் திகதி நீநிமன்றில் முன்னிலையாகுமாறு காலி நீதிமன்றம் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட பல நூறு வாகனங்கள் படையினரின் துணையுடன் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு