கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை...

ஆசிரியர் - Editor I
கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை...

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பசுபதிவர்ணகுலசிங்கம் என்பவரும் அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு