தரவை துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவுத் தூபி பொலிசாரால் இடித்து அழிப்பு!

ஆசிரியர் - Admin
தரவை துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவுத் தூபி பொலிசாரால் இடித்து அழிப்பு!

மட்டக்களப்பு -தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் நேற்று இடித்து தள்ளியுள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர்.     

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கற்களால் ஆன நினைவு தூபி ஒன்றை அமைத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு உத்தரவிடக் கோரிபொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அதனை அகற்ற உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன் தரவை மாவீரர் இல்லத்துக்குள் நுழைந்த பொலிஸார் அந்த நினைவு தூபியை இடித்து தள்ளி சென்றுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு