பெண் ஒருவரை வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டணை வழங்கிய கிளிநொச்சி மேல் நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
பெண் ஒருவரை வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டணை வழங்கிய கிளிநொச்சி மேல் நீதிமன்றம்..

பெண் ஒருவரை கொலை செய்த  குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை (09) கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி  பிரமந்தனாறு பகுதியில்  கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி மாத்தறை பகுதியைச்  சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை வெட்டிப் படுகொலை செய்து கிணற்றுக்குள்  வீசி இருந்து நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் விடுதியில் இருந்து மோப்ப நாயின் உதவியுடன் குறித்த சந்தேகநபர்  கைது செய்யப்பட்டு இருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இன்றைய தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு வழங்கும்போது அனைவரும் எழுந்து நின்றதுடன்  நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு  நீதிமன்ற செயற்பாடுகள்  நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு