மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட கிளை சார்பில் தீப்பந்த போராட்டம்...

ஆசிரியர் - Editor I
மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட கிளை சார்பில் தீப்பந்த போராட்டம்...

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று  யாழில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இரவு இப் போராட்டம் நடைபெற்றது.

யாழ்.நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட  தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.

இப் போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆணரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மின்சார அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இப் போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு