நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்தை நிராகரித்த பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்தை நிராகரித்த பொலிஸார்!

பொலிஸ் வேலை என்பது சில்லறை கடைபோன்றது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்.

ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் சாதாரண பிரச்சினைகளுக்கும் பொலிஸ் நிலையத்தை நாடுகின்றனர்.

மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் பொலிஸ் கடமையினை செய்கின்றோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும்போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிசார் இவ்வாறு மந்தகதியில் செயல்படுகிறார்கள் என தெரிவித்தபோது அதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிசார் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் அதாவது ஒரு திருடனை திருட்டு சம்பந்தமாக கைது செய்ய முயன்றால் அவன் ஒழித்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைத்திருப்பான் இப்படி பல சம்பவங்கள் உள்ளன ஆனால் உயிரை உச்சம் என மதித்து தான் இந்த பொலிஸ் கடமையை செய்படுத்துகிறோம்

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். 

எனினும் யாழ்.மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு