யாழ்.மாவட்டத்தில் மந்தகதியில் பொலிஸார்! மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிறீதரன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மந்தகதியில் பொலிஸார்! மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிறீதரன் காட்டம்..

யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் பொலிசாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலைநாட்டுவதற்காக கூட இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.

கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்ப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.

இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. பொலிசாரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது அதாவது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே பொலிசார் இவ்வாறு செயல்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாதுவிட்டால் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள்  எனவும் கோரினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு