கொலை செய்து வீட்டின் பின் புதைக்கப்பட்ட இளம் குடும்ப பெண், கணவன் கைது!

ஆசிரியர் - Editor I
கொலை செய்து வீட்டின் பின் புதைக்கப்பட்ட இளம் குடும்ப பெண், கணவன் கைது!

சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கியிருந்த இளம் குடும்ப பெண் படுகொலை செய்யப்பட்டு வீட்டின் பின் பக்கமாக உள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு (10) ஆம் வட்டாரத்தை சேர்ந்த (23) வயதுடைய கீதா எனும் பெண் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த (23) வயதுடைய ஆணொருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் கடந்த 2 வாரமாக வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மேலும் உயிரிழந்த குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயிடம் நாளாந்தம் கதைத்து வருவதாகவும், கடந்த (21) ம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்ததாகவும்  

திங்கட்கிழமை (23ம் திகதி) மகளும் மருமகனும் வசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்ததையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் பின்புறமாக புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டதாகவும்,

இதனால் சந்தேகமடைந்த குறித்த பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன்

இதேவேளை  உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு