பாடாசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்ற வழிப்பறி கும்பல்!!

ஆசிரியர் - Editor I
பாடாசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்ற வழிப்பறி கும்பல்!!

தினியாவல பிரதேசத்தில்  பாடசாலைக்கு  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்டபோது ஆசிரியை தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆசிரியை பாடசாலைக்கு செல்லும் வழியில் இனந்தெரியாத இரு நபர்கள்  மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியை பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்டபோது ஆசிரியை அவரது நகையை கையில் எடுத்து கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், ஆசிரியை சமயோசிதமாக செயற்பாட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்  கூறினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு