பாம்பு கடித்ததை அறியாமல் பிள்ளையின் வயிற்று வலிக்கு மருந்து கொடுத்த தாய், 11 வயது பிள்ளை பரிதாப மரணம்...

ஆசிரியர் - Editor I
பாம்பு கடித்ததை அறியாமல் பிள்ளையின் வயிற்று வலிக்கு மருந்து கொடுத்த தாய், 11 வயது பிள்ளை பரிதாப மரணம்...

பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 வயதான  பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம, கொடகம  பிரதேச பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி கற்ற  சமன்மாலி என்ற 11 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது உறவினருடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் வைத்து அவரை  பாம்பு கடித்துள்ளது.

பின்னர், தனது தாய் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது , தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அப்போது தாய் பாம்பு கடித்ததை அறியாமல்  தனது மகளுக்கு  இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார்.

இதன்போது  மாணவி வாந்தி எடுத்து மயங்கி வீழந்ததால் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு