பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்க மாலையை அறுத்துச் சென்ற திருடர்கள்!

ஆசிரியர் - Editor I
பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்க மாலையை அறுத்துச் சென்ற திருடர்கள்!

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்தில்  காணப்பட்ட தங்கமாலையை ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாக  கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதக்கத்துடன் கூடிய தங்க மாலையின் பெறுமதி 2,22,500 ரூபா என பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் பரிசோதகர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவராவார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு