கொழும்பிலிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்துவந்து மாடு திருடிய கும்பல் கைது!

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்துவந்து மாடு திருடிய கும்பல் கைது!

கொழும்பிலிருந்து வாடகை அடிப்படையில் வேனை பெற்றுக்கொண்டு அநுராதபுரத்துக்குச் சென்று கால்நடைகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் வேனுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்பேவ, அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 25 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்ட விரோத மாட்டு வியாபாரத்தின் மூளையாக செயற்பட்ட முன்னாள் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாதத்துக்கு முன்னர், அநுராதபுரம், யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் இரண்டு மாடுகள் மற்றும் அநுராதபுரம் பகுதியில் மூன்று மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின்போது, இந்த திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் வெலிசறையைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு