வெந்நீர் கலனில் தவறி விழுந்த இந்திய நாட்டவர் பலி!

ஆசிரியர் - Editor I
வெந்நீர் கலனில் தவறி விழுந்த இந்திய நாட்டவர் பலி!

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர், மீகம தர்கா நகர்ப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோதே வெந்நீர்  கொதிகலனுக்குள் வீழ்ந்து, அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு