நீதிபதி பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்து பூரண விசாரணை அவசியம் - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
நீதிபதி பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்து பூரண விசாரணை அவசியம் - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு..

சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது அவர்  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது இந்த விடயம் ஏற்படுத்தக்கூடிய கடும் தாக்கத்தை கருத்தில் கொள்ளும்போது சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியம் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு இந்த விசாரணை முடிவுகள் குறித்து பொதுமக்களிற்கு தாமதமின்றி தெரிவிக்கப்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு